காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்படையும் நாடுகளில் இந்தியா 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நிலத்தடி நீரை நம்பி வாழ்ந்து வந்த நாம் இப்போது, மாநகராட்சி குடிநீர், ஆர். ஓ. குடிநீர் உள்ளிட்டவற்றை காசு கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு சென்றுவிட்டோம்.
இந்த சூழலை அதாவது நாம் எதிர்கொள்ளும் பருவ நிலை மாற்றங்களை பிற நாடுகளும் உணர்த்தத் தொடங்கிவிட்டன. ஆம், ஜெர்மனி நாட்டின் ஜெர்மன் வாட்ச் என்ற சுற்று சூழல் நிறுவனம் ஆண்டுதோறும் உலகளவில் நிகழும் பருவநில மாற்றம் தொடர்பாக அய்வு நடத்தி அதன் மூலம் நாடுகளை வரிசைப்படுத்துகிறது.
அந்த வரிசையில் 2017ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்தியா 14ஆம் இடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில் இப்போது 2018ஆம் ஆண்டு தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2018ஆம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த இயற்கை பேரிடர்களை கணக்கில் கொண்டு, தரவரிசைப் பட்டியலில் நமக்கு 5ஆம் இடம் வழங்கப்பட்டுள்ளது.