காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதால், அமெரிக்கா தாலிபன்களுடன் பேச்சுவார்த்தையை கைவிட்டது.
தாலிபன்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்றுவந்தது. பல கட்டங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை செப்டம்பர் மாதம் தடைபட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரதிதியாக ஆப்கனுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஜல்மே கலீல்ஜாத் கத்தார் சென்று தாலிபன்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கப்போகிறார் என அமெரிக்க அரசிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.